Thirukalukundram Arulmigu Vedhagiriswarar temple

Thirukalukundram.in

Thirukalukundram.in

ருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுரை அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் -திருக்கழுக்குன்றம்




Arulmigu Vedhagiriswarar Temple - Thirukalukundram !!

இறைவர் : அருள்மிகு வேதகிரிஸ்வரர்  

இறைவி :அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்

இறைவர் : அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் (தாழக்கோவில்)  

தல மரம் : வாழை மரம் (கதலி)

தீர்த்தம் : சங்குத் தீர்த்தம்





Aaruthra Tharisanam


திருக்கழுக்குன்றம் திருக்கோவில் ஆருத்ரா தரிசனம்

Thirukalukundram Temple Aaruthra Tharisanam




அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவிலில் நடராஜர் சுவாமி சங்குதீர்த்தகுளத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.வருடந்தோரும் மார்கழி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் நடராஜர் சுவாமிக்கு ஆருத்ரா தரிசன விழா நடைபெறும். அதன்படி திருக்கழுக்குன்றம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 2ஆம் தேதி 10நாட்கள் நடைபெறும் மாணிக்கவாசகர் உற்சவம் துவங்கியது. உற்சவத்தின் கடைசி நாளான நேற்று நடராஜர் சுவாமிக்கும் சிவகாமிசுந்தரி அம்மனுக்கும் மற்றும் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் நடராஜர்சுவாமி சங்குதீர்த்தகுளத்தில் எழுந்தருளி தீர்த்தவாரியில் ஈடுபட்டு மீண்டும் சன்னிதானம் வந்தடைந்தார். அங்கு திருவாசக முற்றோதல் பாடப்பெற்று ஓதுவரால் தேவார, திருவாசக ஊடல் நடைபெறும் .